இந்தியா, மார்ச் 31 -- ரம்ஜான் பண்டிகையை குறிவைத்து நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'சிக்கந்தர். ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் சல்மான்கான் ஆகிய இரண்டு பேருக்குமே கம்பேக் படமாக 'சிக்கந்தர்' பார்க்கப்பட்டதால், படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.

அதிரடி ஆக்‌ஷன், டிராமா, ஸ்டண்ட்ஸ் சல்மானுக்கே உரித்தான ஸ்டைல் உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இந்தப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லையோ என்றே தோன்றுகிறது.

காரணம், இணையத்தில் இந்தத் திரைப்படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், 'ஒவ்வொரு நடிகரும் சிக்கந்தர் படத்தைப் பார்த்து தங்கள் திரைப்படங்களில் என்ன செய்ய கூடாது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.' என்று பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க | ச...