இந்தியா, ஜனவரி 30 -- தற்போதைய காலகட்டத்தில் சேமிப்பு கணக்கே இல்லாதவர் எவரும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு வங்கி சேவை அனைவருக்கும் சென்று சேர்ந்துள்ளது. டிஜிட்டல் காலகட்டம் வந்த பிறகு நம்முடைய கைகளிலேயே மொத்த வங்கி சேவையும் அடங்கி விடுவதால் சேமிப்பு கணக்கின் தேவையும் டிஜிட்டல் சார்ந்த சேவைகளை பிரதானமாக நம்பியே நாம் இருக்கிறோம். அப்படி இருக்க சேமிப்பு கணக்கில் இருந்து அடிக்கடி பணம் பிடிப்பதாக வங்கி தரப்பிடமிருந்து நமக்கு எஸ்எம்எஸ் அல்லது பாஸ்புக் பதிவேட்டின் போது நாம் காணக்கூடும். அவ்வாறு வங்கிகள் விதிக்கும் சேவை கட்டணங்கள் (சர்வீஸ் சார்ஜஸ்) குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

வங்கிகள் நமக்கு வழங்கும் சேவைக்கு ஈடாக சேவை கட்டணம் வசூலிக்கிறது. அதுதான் சர்வீஸ் சார்ஜஸ் என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக நாம் பயன்படுத்தும் ஏடிஎம் கார்டு, வங்க...