School bus accident: கால்வாயில் கவிழ்ந்து பள்ளி வாகனம் விபத்து - 4 பேர் காயம்
இந்தியா, நவம்பர் 29 -- கன்னியாகுமரி மாவட்டம் வேர்க்களம்பு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி வாகனம் ஒன்று குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்றது. அப்போது பேருந்தில் பாதுகாவலர் உள்பட் இரண்டு குழந்தைகள் பயணித்துள்ளனர்.
பள்ளி பேருந்து சுவாமியார் மடம் அருகே வந்தபோது அங்கிருந்த பட்டணம் கால்வாய் பகுதியில் எதிரில் வந்த வாகனத்துக்கு வழிவிட்டபோது கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்தது. இந்த விபத்தையடுத்து அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் கால்வாயில் கவிழ்ந்த பேருந்தில் சிக்கிய 2 குழந்தைகள், பாதுகாவலர் மற்றும் ஓட்டுநரை மீட்டனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்த திருவட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by HT Digital Content Services ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.