இந்தியா, மார்ச் 27 -- தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளராக இருப்பவர் சசிக்குமார். 2008இல் வெளியான சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குநர், நடிகராக அறிமுகமானார். அந்த படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார்.

80களின் பின்னணி காதல், ஆக்‌ஷன் கலந்த கேங்ஸ்டர் படமாக இருந்த சுப்பிரமணியபுரம் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த சசிக்குமார், அடுத்து சமுத்திரகனி இயக்கிய நாடேடிகள் படத்தில் ஹீரோவாக நடித்தார்.

நாடோடிகள் படத்தை தொடர்ந்து ஈசன் என்ற படத்தை இயக்கினார். இதன் பிறகு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கினார் சசிக்குமார். அத்துடன் படங்களை தயாரிக்கும் பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தினார்.

தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்த அவர், கிராமத்து பின்னணியில் ஆக்‌ஷன், காதல், குடும்ப செண்டிமென்ட் படங்களில் நட...