இந்தியா, மார்ச் 5 -- Sani Peyarchi 2025: நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக் கூடியவர் சனி பகவான். இவர் இரண்டரை ஆண்டு காலத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். சனிபகவான் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். பொதுவாக சனி பகவான் ஒரு ராசியில் அதிக காலம் பயணிக்க கூடியவர்.

மனிதர்கள் செய்யக்கூடிய கர்ம வினைகளுக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை கொடுக்கக் கூடியவர். சனி கொடுத்தால் எவரும் தடுக்க முடிய...