இந்தியா, மார்ச் 13 -- Sani Peyarchi 2025: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அந்த கால பயணம் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிட சாஸ்திரத்தின் படி மிகவும் முக்கியமான கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார்.

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சனி பகவான் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அன்று கும்ப ராசியில் அஸ்தமனமானார். வருகின்ற ஏப்ரல் ஆறாம...