இந்தியா, மார்ச் 29 -- Sani Peyarchi: நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது சனி பகவான் இந்த மார்ச் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து விலகி மீன ராசியில் நுழைந்தார். வருகின்ற 2027-ம் ஆண்டு வரை சனிபகவான் இதே ராசியில் பயணம் செய்வார்.

நவகிரகங்களில் சனி பகவானின் இடமாற்றமானது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இன்றைய சனி பெயர்ச்சி தினத்தில் மேலும் சிறப்பு என்னவென்றால் சனி அமாவாசை மற்றொன்று சூரிய கிரகணம். இந்த மூன்று நிகழ்வுகளும் ஒரே நாளில் நடப்பது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. இந்த 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மார்ச் 29ஆம் தேதி அன்று நிகழ்கின்றது.

சூரிய கிரகணத்தின் போது சூரியன் மீன ராசியில் இருப்பார் அதே வேலையில் சனிபக...