இந்தியா, பிப்ரவரி 1 -- Ruchka Rajyog: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களின் தளபதி பதவியை வகித்து வருபவர் செவ்வாய் பகவான். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவர் தனது ஒரு ராசி சுழற்சியை முடிப்பதற்கு 22 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் செவ்வாய் பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி அன்று விருச்சிக ராசிக்கு செல்கிறார். செவ்வாய் பகவான் தனது சொந்தமான ராசிக்கான விருச்சகத்தில் நுழைவது ருச்சக யோகத்தை உருவாக்கப் போகின்றது. இது மிகவும் சக்தி வாய்ந்த ராஜயோகம் என கருதப்படுகிறது. 22 மாதங்களுக்கு ஒரு முறை இந்த ராஜயோகம் உருவாகும் என கூறப்படுகிறது.

பஞ்ச மகா புருஷ ராஜ யோகங்களில் இந்த ருச்சக ராஜயோகமும் ஒன்று என கூறப்படுகிறத...