இந்தியா, பிப்ரவரி 4 -- அரிசி களைந்த தண்ணீர் மற்றும் அரிசி வடித்த கஞ்சி இரண்டுமே இளமை முதல் முதுமை வரை சருமத்துக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. இது சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்துக்களைக் கொடுக்கிறது. இது சருமம் முதிர்வடைவதைத் தடுக்கிறது. பல அழகு சாதன பொருள் நிறுவனங்கள் கூட அதை தங்கள் பொருட்களின் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையில் நல்லதா? இதன் நன்மைகள் அனைத்தும் நிரூபிக்கப்படவில்லை. எனவே அதன் நன்மைகள் மற்றும் தீமைகளைப் பாருங்கள்.

இதில் உள்ள இயற்கை எண்சைம்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் பொலிவிழந்த சருமத்தை பொலிவாக்குகிறது. அது கரும்புள்ளிகளைப் போக்குகிறது. உங்கள் சருமத்துக்கு பளபளப்பைக் கொடுக்கிறது என்று அழகுக்கலை நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இளம் வயதிலேயே முதிர்ந்த தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது

இதில் உள்ள ஆன்ட...