இந்தியா, பிப்ரவரி 18 -- தீபாவளி பண்டிகைக்கு ஸ்வீட் தயாரித்ததில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு பதிவு வரவேற்பிற்குரியது, அது போல் தீபாவளி இனிப்பு, C/F நியமனம், முறைகேடான பணி நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழல் முறைகேடுகளை மூடி மறைக்கும் பால்வளத்துறை, ஆவின் அதிகாரிகள் மீதும் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் கடந்த அதிமுக ஆட்சியில் 33 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆண்டுகள் பல கடந்தும் தமிழ்நாடு காவல்துறை ராஜேந்திர பாலாஜி ம...