இந்தியா, நவம்பர் 29 -- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டில் பனியின் தாக்கமும் அதிகமாகவே உள்ளது. பனிபொழிவு தொடங்கி விட்டால் மழை குறைந்து வீடும் என்றாலும், ஒரு சில இடங்களில் தொடர்ந்து மழை பெய்தும், திடீரென பருவநிலை மழை பெய்வதுமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தேனி, விருதுநகர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது வரை மழை தொடர்ந்து வரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவையில் வரும் 30ம் தேதி வர...