இந்தியா, மார்ச் 1 -- 'பணியிடங்களை நிரப்ப முதலமைச்சராக இருந்த நான் அனுமதி தந்தாலும், அதனை நிரப்ப முடியாத நிலை உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி வேதனை தெரிவித்து உள்ளார்.

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு, சுகாதார மற்றும் குடும்ப நலவழித்துறை சார்பாக 'மாபெரும் சுகாதாரத் திருவிழா' புதுச்சேரி, கருவடிக்குப்பம், சிவாஜி சிலை அருகில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் 2 நாள் விழா தொடங்கியது. இன்று நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாபெரும் சுகாதாரத் திருவிழாவினைக் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, டெங்கு காய்ச்சலை எதிர்த்துப் போராடுவதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிகாரமளிக்கும் விரிவான திட்டமான "டிரீம்ஸ் 24 - பள்ளிகளில் கல்வி, விழிப்...