Chennai, ஏப்ரல் 14 -- நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், நாளுக்கான நாள் வெப்பநிலையும் அதிகரித்து வருகிறது. கோடை காலம் இன்னும் உச்சத்தை எட்டிராத நிலையிலே வெயிலின் தாக்கமானது அதிமாகவே உள்ளது. சுட்டெரிக்கும் வெப்பத்தால் அனைத்து வயதினரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக கோடை காலத்தில் அதிக பாதிப்புகளை சந்திக்ககூடியவர்களாக கர்ப்பிணிப் பெண்கள் உள்ளார்கள். இரண்டு உயிர்களை சுமக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு கோடை காலத்தில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

பெங்களூரில் உள்ள அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் மூத்த ஆலோசகர் மகப்பேறு இயல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் மீனாட்சி காமத் இந்துஸ்தான் டைம்ஸ் லைஃப்ஸ்டைலுக்கு பேட்டி அளித்துள்...