இந்தியா, பிப்ரவரி 28 -- எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும், எந்த காலத்திலும் சாப்பிடப்பகூடிய ஸ்நாக்ஸ் லிஸ்டில் பிரதனமாக இடம்பிடித்திருக்கிறது உருளை கிழங்கு. நாம் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது சரி, ஒன்றாக இணைந்து பேசிக்கொள்ளும்போது சரி, உணவுக்கு சைடு டிஷ்ஷகாவும் சரி உருளை சிப்ஸ் என்பது பிரதானமாக இடம்பெறும் நொறுக்கு தீனியாக உள்ளது. எவ்வளவுதான் அதை சாப்பிட்டாலும் வயிறு நிரம்பிய உணர்வு இருக்காது. அப்பாடா என்கிற திருப்தியும் இருக்காது.

உருளைகிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதென்பது ஒரு விதமான போதையாகவே உள்ளது. சாப்பிடுவதற்கு எதுவும் இல்லாவிட்டால் வெறும் உருளை கிழங்கு சிப்ஸை மட்டும் வயிறு முட்ட சாப்பிடும் பழக்கமும் பலரிடம் இருந்து வருகிறது. அதனால் ஏற்படும் சில உடல் நல பாதிப்புகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. உப்பு, காரம் போன்ற பல்வேறு ப்ளேவர்க...