இந்தியா, ஏப்ரல் 5 -- PM Modi: பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையின் உயரிய விருதான மித்ர விபூஷணா விருது வழங்கப்பட்டது. இலங்கையின் உயரிய விருதை வழங்கினார் அதிபர் அநுர குமார திசநாயக. மேலும் இரு நாடுகளுக்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இலங்கையின் கொழும்பு பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, மீன்பிடித்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் வரவேற்றனர்.

சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடியை இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயக இன்று வரவேற்றார்.

இலங்கைக்கு வருகை தந்த பிரமுகர் ஒருவருக்கு முதன்முறையாக இலங்கை இந்த கௌரவத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது, இது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளின் வரலாற்று ம...