இந்தியா, மார்ச் 6 -- Pisaasu Yogam: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக விளங்கக் கூடியவர் சனிபகவான். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

தற்போது சனி பகவான் ராசியாக விளங்கும் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது இவருடைய சொந்தமான ராசியாகும். இந்நிலையில் மார்ச் மாத இறுதியில் சனிபகவான் மீன ராசிக்கு செல்கின்றார். தற்போது மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்த வருகின்றார்.

மீன ராசியில் சனி மற்றும் ராகு சேர்க்கின்ற காரணத்தினால் பிசாசு யோகம் உருவாகியுள்ளது. இது அழிவை ஏற்படுத்தக்கூடிய ய...