இந்தியா, ஏப்ரல் 18 -- நமது மக்கள் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். குறிப்பாக மற்ற உயிரினங்களை தெய்வமாக பார்க்கும் பழக்கம் இன்று வரை இருந்து வருகிறது. காகத்தை முன்னோர்களாக நினைத்து வழிபாடு செய்து வருகின்றனர். நாயை காலபைரவன் ஆக நினைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பல்லியின் அனைத்து விதமான செயல்பாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்து வருகின்றது. பல்லி அனைவரது வீட்டிலும் இருந்து வருகிறது. அதனுடைய சத்தம் அதனுடைய செயல்பாடுகள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பல்லி விழுவதின் பலன்கள் குறித்து விவரமாக இந்த பதிவில் காண்போம்.

நெற்றி மீது பல்லி விழுந்தால் நல்ல சகுனமாக கருதப்படுகிறது இடது பகுதியில் விழுந்தால் கீர்த்தி கிடைக்கும் வலது நெற்றி பக்கத்தில் விழுந்தால் லட்சுமி கடாக்ஷம்...