இந்தியா, டிசம்பர் 6 -- நாடுமுழுவதும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இன்று மாலை தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு செய்யப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் பழனி கோயிலில் அதிகரித்துள்ளது. திருக்கார்த்திகை முன்னிட்டு பழனி கோயிலில் குவிந்த பக்தர்கள் மலை அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோயிலுக்கு செல்லும் படிப்பாதைகளில் ஒவ்வொரு படிகளிலும் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தியபடியே மலைக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கூட்டம் மற்றும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு குவிந்துள்ள பக்தர்கள் கூட்டம் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி கோயிலுக்கு வருகை தந்துள்ளதால் பக்தர்கள்‌ நலன்கருதி, பக்தர்கள் மேலே செல்...