இந்தியா, மே 9 -- ஆப்ரேஷன் சிந்தூர் பதிலடி தாக்குதல் நடந்து வரும் நிலையில் எனது பிறந்தநாளுக்காக என்னை சந்திக்க யாரும் வர வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்க:- இன்றைய தங்கம் விலை நிலவரம்: 'தங்கம் விலை குறைந்தது!' மே 09, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இது தொடர்பாக அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக இந்தியா #OperationSindoor நடவடிக்கையை மேற்கொண்ட பின்னர், பாகிஸ்தான் இந்தியாவின் பல நகரங்களை தாக்க முயன்றதை முறியடித்து, நாட்டு மக்களை பாதுகாக்கும் இந்திய ராணுவத்தின் வீரத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த கடினமான சூழலில், தேசமாக ஒன்றிணைந்து ராணுவத்திற்கு ஆத...