இந்தியா, ஏப்ரல் 6 -- பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு வரும் நிலையில், சென்னை வந்து உள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

நேற்றைய தினம் சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து காட்டாங்குளத்தூரில் உள்ளஎஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர், அவர் கிண்டியில் உள்ள ஐடிசி நட்சட்திர விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று இரவு 8:30 மணியளவில் சீமான் அவரை சந்தித்ததாகவும், இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து,...