இந்தியா, பிப்ரவரி 19 -- இந்தப்பொடியை 9 நாட்கள் தொடர்ந்து எடுத்து வந்தால், நரம்பு தொடர்பான பிரச்னைகள், கை-கால் மறத்துப்போதல், உடல் வலி, உடல் சோர்வு, நடந்தால் ஏற்படும் வலி ஆகிய அனைத்துக்கும் முழுமையான தீர்வைத்தரும். அதற்கான இயற்கை தீர்வாக இது அமையும்.

சிலருக்கு ஒரு கால் அடிக்கடி மறத்துப்போகும், சிறிது தூரம் நடந்தாலே கால் வலி அதிகமாகும். உறங்கும்போது ஒரு கால் அல்லது கை மறத்துப்போகும். இதுபோன்ற பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு கொடுக்கும்.

வால்நட் அல்லது அக்ரூட் பருப்பு - 15

வைட்டமின் இ மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்துள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. தளர்வடைந்த நரம்பு மண்டலத்தை சீரடையச்செய்து, நரம்பு செல்களை புதுப்பிக்கும், உடலில் புது ரத்தம் ஊற வழிவகுக்கும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். உடல் சோர்வுகளை போக்கும்.

மிளகு - ...