இந்தியா, ஏப்ரல் 7 -- கோலிவுட்டின் ஸ்டார் தம்பதிகளாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோர் இருந்து வருகிறார்கள். 2015ஆம் ஆண்டில் நானும் ரெளடி தான் படப்பிடிப்பில் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், டேட்டிங், காதலுக்கு பிறகு தம்பதிகள் ஆகியுள்ளனர். திருமணத்துக்கு பின்னரும் நயன்தாரா பிஸியான நடிகையாக வலம் வருகிறார். அதேபோல் விக்னேஷ் சிவனும், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதலுக்கு நடிகர் தனுஷ் தான் ஆரம்பபுள்ளியாக இருந்திருப்பது தெரியவந்துள்ளது. நானும் ரெளடி தான் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், நயன்தாராவிடம் கதை கூறுமாறு விக்னேஷ் சிவனிடம் தெரிவித்துள்ளாராம். அப்போது தான் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இடையே அறிமுகம் ஏற்பட்டு, நட்பாகி, காதலாக மலர்ந்தது.

தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறிய...