இந்தியா, ஏப்ரல் 17 -- பல இயக்குநர்கள் பயணம் செய்த இந்த தமிழ் சினிமாவில் தனித்துவமான மண்வாசனை கொடுத்து மக்களிடத்தில் இடம் பிடித்து வெற்றி இயக்குநராக வலம் வந்தவர் பாரதிராஜா. இன்று வரை அவரது இடத்தை நிரப்பப் பலரும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த அளவிற்குத் திரைக் கதையை எளிமையாக மக்களிடம் புகுத்த கூடியவர் இயக்குநர் பாரதிராஜா. இவருக்கு உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் திரைக்கதையின் மன்னன் கே.பாக்யராஜ். இயக்குநர் பாக்யராஜின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் தான் இயக்குநர் பார்த்திபன்.

இப்படித் தொடர்ந்து தலைமுறைகளை வளர்த்தெடுத்தவர் இயக்குநர் பாரதிராஜா. அப்படிப்பட்ட கிராமத்துக் கதைகளைக் கொடுத்த பாரதிராஜா வித்தியாசமான கதைகளத்தை, தொட்ட திரைப்படம் தான் நாடோடி தென்றல்.

சுதந்திரத்திற்கு முன்பு முக்கோண காதலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்...