இந்தியா, மார்ச் 26 -- Mookuthi Amman 2 Movie: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் பிரச்னை ஏற்பட்டதாக சமீபத்தில், செய்திகள் வெளியாகின. அதில், முன்னணி நடிகை நயன்தாரா சென்னையில் படப்பிடிப்பை பாதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் இதனால் கோபமடைந்த இயக்குநக் சுந்தர் சி நயன்தாராவிற்கு பதில் நடிகை தமன்னா பாட்டியாவை நடிக்க வைக்கலாம் என்றும் தயாரிப்பாளக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாவும் கூறப்பட்டு வந்தது.

இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடிகை குஷ்பு எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் எந்த பிரச்னையும் இல்லை என குஷ்பு தெளிவுபடுத்தினார். " மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு குறித்து பல தேவையற்ற வதந்திகள் பரவி வருகிறது. ஆனால், படப்பிடிப...