இந்தியா, ஏப்ரல் 26 -- எம்.ஜி.ஆரின் முதல் திருமணம் குறித்து பத்திரிகையாளர் சபிதா ஜோசப் ஆகாயம் தமிழ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, "புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அப்போதுதான் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது அவருக்கு 200 முதல் 300 ரூபாய் வரை சம்பளம் இருந்ததாக சொல்லப்படுகிறது.

அந்த சமுதாயத்தில், அவர் வால் டாக்ஸ் ரோட்டில், ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தார். அந்த வீட்டிற்கு 30 ரூபாய் வாடகை. ஒரு நாள் அவர் அங்கே உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அருகில் தண்ணீர் எடுத்து வரக்கூடிய ஒரு பெண், எம்ஜிஆரை ஜொல்லு விட, இதை பார்த்த எம்.ஜி.ஆர் அம்மா உடனடியாக எம்ஜிஆருக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று சொல்லி, கேரளாவிற்கு சென்று ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைத்து விட்டார். அவர் பெயர் தங்கமணி. அவர் மிக அழகாக இ...