இந்தியா, பிப்ரவரி 13 -- Mayuranathaswami: இந்தியாவில் சிவபெருமானுக்கான மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. தனக்கென சொந்த உருவமில்லாமல் லிங்க திருமேனியாக உலகம் எங்கும் காட்சி கொடுத்து வருகிறார் சிவபெருமான். அனைத்து மக்களுக்குமான கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார்.

மனித உயிரினம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. உலகமெங்கும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். நமது இந்தியாவில் எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பல வெளிநாடுகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங...