இந்தியா, பிப்ரவரி 6 -- Mass Luck: நவகிரகங்களில் மங்கள யோக காரகனாக விளங்க கூடியவர். குரு பகவான் இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

குருபகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் தனது இடத்தை மாற்றினார்.

இந்த 2025 ஆம் ஆண்டு மீண்டும் தனது இடத்தை குரு பகவான் மாற்றுகிறார். குரு பகவான் வருகின்ற 2025 மே மாதம் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கிறார். குருபகவானில் இந்த 2025 ஆம் ஆண்டு இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும...