இந்தியா, ஜனவரி 26 -- Marundeeswarar: மனித உயிரினம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை அப்பொழுதே கட்டி வைத்து சென்றுள்ளனர்.

அந்த கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து இன்று வரை கம்பீரமாக வரலாற்று சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது. இது போன்ற எத்தனையோ கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருக்கின்றன. சில கோயில்க...