இந்தியா, பிப்ரவரி 13 -- Mars Vakra Nivarthi: நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார்.

கோபத்தின் நாயகனாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து தைரிய யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் செவ்வாய் பகவான் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைகின்றார்.

மகா சிவராத்திரி திருநாளுக்கு முன்பாக வக்கிர நிவர்த்தி அடையும் செவ்வாய் பகவானின் யோகத்தை ஒரு சில ராசிகள் பெறப்போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

செவ்வாய் பகவானின் வக்கிர நிவ...