இந்தியா, மே 4 -- ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் ஆகியோரது நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அந்தப்படத்தில் இடம் பெற்ற 'உருகி உருகி' பாடல், இன்றும் பல்வேறு தளங்களில் ஒளிப்பரப்பாகி, மக்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறது.

நீண்ட நாட்களாக சினிமாவில் ஒரு வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்த ரியோவிற்கும் ஜோ திரைப்படம் திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் இந்தக்கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது.

இவர்கள் இணையும் புதிய திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. இயக்குநர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, ஜனரஞ்சகமான வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த "ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்" நிறுவனம் சார்பாக, மணிகண்டன் கந்தசுவாமியின் மேற்பார்வையில் இந்தப்படம் தயாரிக்கப்பட இருக்கிறது. ப...