இந்தியா, ஜனவரி 31 -- இன்று மதியம் 4.30 மணிக்குள் தமிழக அரசின் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராகவில்லை என்றால், அவருக்கெதிராக வாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என என உயர்நீதிமன்றம் எச்சரித்து உள்ளது.

2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விருகம்பாக்கம் போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி பி.சுந்தர் என்பவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு கடந்த 2015 ஆம் ஆண்டிலேயே முடித்து வைக்கப்பட்டதாக அரசுத்தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி வேல்முருகன் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதுபோன்ற சம்பவம் இது முதல் முறையல்ல, பல வழக்குகளில் விசாரணை முடிந்த பிறகும், போலீசார் இறுதி அறிக்கையை சம்ப...