இந்தியா, ஜனவரி 30 -- Lord Siva: உலகம் முழுவதும் மிகப்பெரிய பிரம்மாண்ட பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.

குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மன்னர்கள் மண்ணுக்காக போரிட்டு வந்தாலும் அனைத்து மன்னர்களும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.

அப்படிப்பட்ட மன்னர்கள் சிவபெருமான் மீது கொண்ட பக்தியின் காரணமாக மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை போட்டி போட்டுக் கொண்டு கட்டி வைத்துச் சென்றுள்ளனர். காலத்தால் அழிக்க முடியாத பல்லாயிரம் ஆண்டுகள் ...