இந்தியா, ஜனவரி 29 -- கடந்த ஜனவரி 27ஆம் தேதி சதய நட்சத்திரத்தில் மூன்றாம் பாகத்தில் சனி சஞ்சரிக்கிறார். பிப்ரவரி 10ஆம் தேதி வரை இதே நிலை தான் நீடிக்கும். அதன் பின் தனது ராசி நட்சத்திரத்தினை மாற்றுகிறார். இதனால் சில ராசியினர் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்கவேண்டும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ரிஷபம்: இந்த ராசியினருக்கு சனியின் நட்சத்திர மாற்றத்தால் கெடுபலன்களே கிடைக்கும். பொதுவெளியில் உங்களுடைய செயல்பாடுகளில் கவனம் தேவை. போக்குவரத்தில் கவனமாக இல்லையென்றால் விபத்துகள் நடக்கலாம். வீண் அலைச்சல் உண்டாகும். அனைவரையும் நண்பர்கள் போல் நினைத்துப் பேசாதீர்கள். சில இடங்களில் ஏமாறுவதற்கு வாய்ப்புண்டு. உடல்நலன் பாதிப்பு உண்டாகும்.

கடகம்: இந்த ராசியினருக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் உங்களது உழைப்புக்குண்டான பெயர் கிடைக்காமல் போகலாம்...