இந்தியா, பிப்ரவரி 12 -- Lord Mars: நவகிரகங்களின் தளபதியாக திகழ்ந்து வரக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் கோபத்தின் நாயகனாக திகழ்ந்து வருகின்றார். சிவபெருமானின் ருத்ரதாண்டவத்தில் உதிர்ந்த வியர்வை துளியில் பிறந்தவர்தான் இந்த செவ்வாய் பகவான் என கூறப்படுகிறது. அதன் காரணமாக இவர் எப்போதும் உக்கிரமாக இருப்பார் என கூறப்படுகிறது.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. செவ்வாய் பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இவர் 12 ராசிகளின் சுழற்சியை முடிப்பதற்காக தோராயமாக 22 மாதங்களில் எடுத்துக் கொள்கிறார்.

செவ்வாய் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது....