இந்தியா, ஜனவரி 9 -- Lord LuckL நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் தன்னம்பிக்கை வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

செவ்வாய் பகவான் தனது சுழற்சியை முடிப்பதற்கு குறைந்தது 22 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி அன்று கடக ராசியில் வக்கிர நிலையில் செவ்வாய் பகவான் பயணத்தை தொடங்கினார். வருகின்ற ஜனவரி 21ஆம் தேதி அன்று வக்கிர நிலையில் மிதுன ராசிக்கு செல்கிறார்.

அதன் பின்னர் வரும் 2025 பிப்ரவரி 21ஆம் தேதி அன்று மிதுன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். செவ்வாய் பகவான...