இந்தியா, ஜனவரி 29 -- புதன் கிரகம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மகர ராசிக்கும்; சுக்கிரன் கிரகம் பிப்ரவரி 12ஆம் தேதி மகர ராசிக்கும் சஞ்சரிக்கவுள்ளது. இதனால் மகர ராசியில் லட்சுமி நாராயணயோகம் உருவாகிறது. இதனால் ஐந்து ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த லட்சுமி நாராயண யோகத்தால் வாழ்வில் செல்வ வளம் பொங்கப்போவதாக சொல்லப்படுகிறது.

மேஷம்: இந்த ராசியினர் லட்சுமி நாராயண யோகத்தால் செல்வ வளத்தைப் பெறவுள்ளனர். இக்கால கட்டத்தில் தொழில்முனைவோர்கள், சிறு வியாபாரிகள், குடிசைத்தொழில் செய்பவர்கள், தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். வருமானம் பெருக அதிக வாய்ப்புகள் உள்ளன. உடல் நலம் மேம்படும்.

மிதுனம்: இந்த ராசியினர் புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் இத்தனை நாட்களாக வேலையில்லாமல் தவித்து வருபவர்களுக்கு நல...