இந்தியா, பிப்ரவரி 1 -- Koneswarar: பல தல வரலாறுகளைக் கொண்டு பல இடங்களில் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி கொடுத்து வருகிறார். உலகம் முழுவதும் பிரம்மாண்ட பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். குறிப்பாக இந்தியாவில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழக்கூடிய எத்தனையோ சிவ பக்தர்கள் இன்று வரை இருந்து வருகின்றனர்.

திரும்பவும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு நமது இந்தியாவில் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடவுளுக்கெல்லாம் கடவுளாக திகழ்ந்து வருவதாக சிவபெருமானை குறிப்பிட்டு வருகின்றனர் பக்தர்கள்.

குறிப்பாக மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. மண்ணுக்காக பல மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது சிவபக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெர...