இந்தியா, டிசம்பர் 8 -- கன்னட நடிகர் யஷ் நடித்த கே.ஜி.எப் 1 மற்றும் 2 ஆவது பாகங்களில் கண் தெரியாத முதியவராக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் கிருஷ்ணா ஜி.ராவ். பெங்களூருவில் வசித்து வந்த இவர் வயோதிகம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் அவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பாக பெங்களூரு சீதா சர்க்கிள் அருகே உள்ள விநாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

கிருஷ்ணா கடந்த 30 ஆண்டுகளாக கன்னட திரையுலகில் பணியாற்றி வருகிறார். ஆனால் கே.ஜி.எப் படத்திற்கு பிறகு தான் பிரபலமடைந்து இருக்கிறார். அவர் கன்னடத்தில் நாமோ நாராயணா என்ற படத்திலும் நடித்து இருந்தார். அப்படம் வெளியாகும் முன்பே அவர் உயிரிழந்து விட்டார்.

கிருஷ்ணா ஜி.ராவ் மறைவுக்க...