இந்தியா, ஏப்ரல் 4 -- கஜகஸ்தான் சர்வதேச சேலஞ் பேட்மிண்டன் தொடர் கஜகஸ்தான் நாட்டிலுள்ள உரால்ஸ்க் நகரில் நடைபெற்று வருகிறது. 2015 முதல் இந்த பேட்மிண்டன் தொடரானது நடந்து வரும் நிலையில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியா நடப்பு சாம்பியனாக இருந்து வருகிறது.

அத்துடன் பேட்மிண்டன் உலக சம்மேளனத்தின், பேட்மிண்டன் ஆசியா சர்க்யூட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இதில் இந்தியாவின் இளம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து நான்கு இந்தியர்கள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். அதன்படி இளம் வீராங்கனை அன்மோல் கர்ப், தேவிகா சிஹாக், முன்னாள் தேசிய சாம்பியன் அனுபமா உபாதயா, ஏழாம் நிலை வீராங்கனை தன்யா ஹேமந்த் மற்றும் இஷாராணி பருவா ஆகியோரும் க...