இந்தியா, ஏப்ரல் 10 -- மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள கச்சத்தீவு விவகாரம் தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் புதன்கிழமை இந்த விவகாரத்தை 'முட்டாள்தனம்' என்று கூறியதுடன், "அந்த தீவில் யார் வசிக்கிறார்கள்? இந்தக் கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன்" என்று கருத்து தெரிவித்தார். இதற்கு பாஜகவைச் சேர்ந்தவரும், நடிகையுமான கங்கனா ரணாவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அங்கு சென்று கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விவகாரம் குறித்து பேசியபோது, திக்விஜய் சிங், "மோடிஜி மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் முட்டாள்தனமாக பேசுகிறார்" என்று கூறினார்.

தமிழகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தை மீண்டும் ஒருமுறை குறிப்பிட்டு, கச்சத்தீவை இலங்கைக...