இந்தியா, பிப்ரவரி 11 -- Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ராஜராஜனிடம் மாயா மற்றும் மகேஷ் இடையே நல்ல உறவு இல்லை என்று சொல்லிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, கார்த்திக் இப்படி சொல்வதை கேட்டு ராஜராஜன் அதிர்ச்சி அடைகிறார். தொடர்ந்து கார்த்திக் இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தியாக வேண்டும் என்று சொல்கிறான்.

மறுபக்கம் மாயா மற்றும் மகேஷ் அந்த கார்த்திக் திரும்பவும் வந்துட்டான்.. ஏதாவது செய்து அவனை இந்த ஊரை விட்டு துரத்தணும். கார்த்திக் ரேவதியை அடையவே கூடாது என யோசிக்கின்றனர். இங்கே மயில் வாகனம் ராஜராஜனை தனியாக அழைத்து சென்று...