இந்தியா, பிப்ரவரி 16 -- தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், மீனாட்சி தீபாவிற்காக காய்ச்சிய பாலில், ஐஸ்வர்யாவின் அம்மா யாருக்கும் தெரியாமல் மாத்திரையை கலந்த விட்டார். அதனை தொடர்ந்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

அதாவது மீனாட்சி தீபாவுக்கு பால் கொண்டு வந்து கொடுக்க, அதை அவள் குடிக்கப்போகும் சமயத்தில் தர்மலிங்கம் போன் செய்தார். இதனையடுத்து பாலை கீழே வைத்து போன் பேசுகிறாள் தீபா.

பிறகு போனை வைத்துவிட்டு மீண்டும் குடிக்க போகும்போது, கார்த்திக் உள்ளே வந்து என்ன தீபா குடிக்கிறீங்க என்று கேட்க, கோல்டாக இருப்பதால் அக்கா பால் காய்ச்சி எடுத்துட்டு வந்தாங்க என்று சொல்கிறாள். இதைக்கேட்ட கார்த்திக் நீங்க அதெல்லாம் குடிக்க வேண்டாம்...