இந்தியா, ஏப்ரல் 4 -- ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து 18 அடி ஆழத்தில் தலைகீழாக சிக்கிய 2 வயது குழந்தை, நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகாவில் உள்ள லக்சனா கிராமத்தில் சாத்விக் என்ற 2 வயது ஆண் குழந்தை நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தனது வீட்டின் அருகில் உள்ள மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக குழந்தை தவறி விழுந்துள்ளது.

நீண்ட நேரமாகியும் குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடி உள்ளனர். அப்போது தான் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை விழுந்தது தெரிந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் உள்ளி...