இந்தியா, பிப்ரவரி 3 -- பெண் ஏ.டி.ஜி.பி. அறையில் ஏற்பட்ட தீ விபத்திற்கு நாசவேலை காரணம் அல்ல என டி.ஜி.பி. விளக்கம் அளித்து உள்ளார்.

தமிழ்நாடு சீறுடை பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்தால் தன்னை உயிருடன் எரித்து கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக ஏடிஜிபி கல்பனா நாயக் குற்றம்சாட்டி இருந்தார். ஏடிஜிபியின் இந்த குற்றச்சாட்டுக்கு அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கூடுதல் காவல் இயக்குநராக உள்ள திருமதி கல்பனா நாயக் அவர்களிடம் இருந்து காவல்துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று கடிதம் பெறப்பட்டது. தனது கடிதத்தில், சென்னை எழும்பூரில் உள்ள TNUSRB அலுவலகத்தில் 28.07.2024 அன்று நடந்த தீ விபத்து குறித்து அவர் புகார் அள...