இந்தியா, பிப்ரவரி 15 -- சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகள் மற்றும் சொத்துக்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக 1996ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அப்போது அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 11,344 புடவைகள், 750 காலணிகள், 91 கை கடிகாரங்கள், 28 கிலோ மதிப்பிலான தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, கர்நாடக சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால் , பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் கர்நாடக மாநில கருவூலத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்த வழக்கில், ஜெயலலிதா, சசிகலா,...