இந்தியா, மார்ச் 27 -- டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஆன்மீக குருவும், ஈஷா அறக்கட்டளையின் நிறுவனருமான ஜக்கி வாசுதேவ் இன்று (மார்ச் 27) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கடந்த சில வாரங்களாக கடும் தலைவலிக்கு உள்ளான சத்குருவிற்கு மார்ச் 17-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மிகவும் ஆபத்தான அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு சத்குரு அவர்கள் மருத்துவர்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக உடல்நலனில் முன்னேற்றம் கண்டார். கிட்டத்தட்ட 10 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சத்குருவை அவரது ரசிகர்கள் வரவேற்கும்போது மருத்துவமனையில் இருந்து வெளியே வருவதைக் கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

முன்னதாக, சத்குரு வேகமாக குணமடைந்து வருவதாக ஈஷா அறக்கட்டளை தெரிவித்திருந்தது. ...