இந்தியா, மார்ச் 31 -- மூகாம்பிகை அம்மன் உடனான ஆன்மீக தேடல் குறித்து இளையராஜா நியூஸ் 18 யூடியூப் சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, அது 1974 காலக்கட்டம். நானும், வைத்தியநாதனும் ஜி.கே. வாசனின் உதவியாளர்களாக வேலைப்பார்த்துக்கொண்டிருந்தோம். இந்த நிலையில் ஜி கே வாசன் எங்களை அழைத்து மைசூரில் கச்சேரி இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னார். இதனையடுத்து வைத்தியநாதன், ராஜா நீயே எல்லாவற்றையும் பார்த்துக் கொள் என்று விலகிக் கொண்டார். நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்தேன். மைசூர் சென்றோம்.

நான், வைத்தியநாதனிடம் கச்சேரிகளை நடத்துவதற்கு முன்னால், மைசூர் வரை வந்திருக்கிறோம். மத்தநல்லையா சென்று வந்து விடலாமா என்றேன். அதற்கு அவர், தான் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு செல்வதாக சொன்னார். மேலும், அங்கு எ...