இந்தியா, ஏப்ரல் 27 -- உலகங்களும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் வாழ்த்து வருகிறார் சிவபெருமான். தனக்கென மிக பெரிய பக்தர்கள் கூட்டத்தைக் கொண்டிருக்கிறார் சிவபெருமான். ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை சிவபெருமானுக்கு கோயில்கள் எழுப்பப்பட்டு பக்தர்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. மன்னர்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் வணங்கும் தெய்வமாக சிவபெருமான் விளங்கி வருகின்றார்.

பல நூற்றாண்டுகளை கடந்து எத்தனையோ சிவன் கோயில்கள் இன்று வரை அசைக்க முடியாத நிலைமையில் இருந்து வருகிறது. ஒவ்வொரு கோயிலும் தனி சிறப்பைக் கொண்டு விளங்கி வருகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் அருள்மிகு வில்வனேஸ்வரர் திருக்கோயில்.

பஞ்ச பாண்டவர்களில் மிகவும் பலசாலியாக கருதப்படக் கூடியவர் பீமன் இவர் மணலிங்கம் செய்து வழ...