இந்தியா, ஜனவரி 29 -- உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வரும் நடைபெற உள்ள 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் மேகங்கள் தென்படத் தொடங்கிவிட்ட நிலையில் நாடு விடுதலை அடைந்தது முதல் கடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டு வரையிலான நாடாளுமன்றத் தேர்தல் களத்தை HT Elections Story தொடர் மூலம் உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறோம்.

நாடு விடுதலை அடைந்த பிறகு 1950 ஜனவரி 26ஆம் ஆண்டு இந்தியா தன்னை குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது. முதல் முறையாக சாதி, மதம், இனம், மொழி, பாலினம், சமூக, உள்ளிட்ட எந்த வித பேதமும் இன்றி 21 வயது நிரம்பிய இந்தியர்கள் அனைவருக்கும் வாக்குரிமையை இந்தியக் குடியரசு வழங்கியது.

1952ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் ஜனவரி 25 ஆம் தேதி வரை 17 நாட்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் மக்களவைத் தேர்தலில் மொத்தமிருந்த 401 தொகுதிகளில் இர...