இந்தியா, ஏப்ரல் 7 -- கோவையில் 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி பிறந்த கோவை சரளாவுக்கு, நான்கு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். இவரது இயற்பெயர் சரளா குமாரி.

சிறு வயதிலிருந்தே நல்ல பேச்சுத் திறமை கொண்ட சரளா தனது கல்வியை கோவையில் தொடங்கினார். பள்ளி நாட்களில் இருந்தே சினிமாவில் அதிக ஆர்வம் கொண்டிருந்த இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகை ஆவார். ஒருமுறை எம்.ஜி.ஆர். கோவை வந்த போது, சரளாவை ஒருவர் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது சரளாவின் திறமைகளைப் அறிந்த எம்.ஜி.ஆர், அவரிடம் 'உனக்கு நிறைய திறமை இருக்கு. என்று சொல்லி, கைநிறைய உதவித் தொகை அள்ளி வழங்கினார். அந்த உதவித் தொகையில் படித்த அவர், எம்.ஜி.ஆரை போல நாமும் பிறருக்கு படிக்க உதவி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை தன் இளம் வயதிலேயே வளர்த்துக் கொண்டார். தன் பள்ளிப்படிப்பை முடித்த கோவை சரளா, சினிமாவில...